செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

பிரணாப் முகர்ஜி சிறந்த நிர்வாகி: பிரதமர் மோடி புகழாரம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறந்த அரசியல்வாதி, நிர்வாகியாக திகழ்ந்தார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

News image

பிரதமர் மோடி (கோப்புப் படம்)

Updated On :12 டிசம்பர் 2024, 3:39 am IST

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறந்த அரசியல்வாதி, நிர்வாகியாக திகழ்ந்தார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி மத்தியில் பல்வேறு ஆட்சிகளில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர். நாட்டின் 13-ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்த அவர் ஆக. 31, 2020 இல் தனது 84-ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பிரணாப் முகர்ஜி அனைவருக்கும் பொதுவானவர். சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். தேசத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நிர்வாகத்தில் நீண்ட அனுபவமும் நாட்டின் கலாசாரம், கோட்பாடுகளைப் பற்றிய ஆழமான அறிவும் பெற்றிருந்தார். இதன் காரணமாக அனைவரிடத்திலும் ஒருமித்த கருத்தை உருவாக்கும் தனித்திறன் கொண்டவராக பிரணாப் முகர்ஜி திகழ்ந்தார். தேசத்தின் முன்னேற்றத்திற்காக அவர் கண்ட கனவை நனவாக்க அனைவரும் தொடர்ந்து பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.