தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளுக்காக நீதி கோரி ராகுலுக்கு கடிதம்!

4 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை என்று பலியான பெண்ணின் குடும்பத்தினர் வருத்தம்

News image

X | Congress

Updated On :12 டிசம்பர் 2024, 6:15 pm IST

உத்தரப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பலியான பெண்ணுக்கு நீதி வேண்டி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் 2020 ஆம் ஆண்டில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இன்று வரையில் நீதி கிடைக்கவில்லை என்று பலியான பெண்ணின் குடும்பத்தினர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளனர்.

பலியான பெண்ணின் குடும்பத்தினர் அளித்த கடிதத்தையடுத்து, வியாழக்கிழமை (டிச. 12) அவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று ராகுல் காந்தி விவரங்களைக் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சுமார் 35 நிமிடங்கள் வரையில் ராகுல் காந்தி உரையாடினார். மேலும், கடிதத்தையும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கடிதத்தில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, என் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், அவரது முதுகெலும்பு உடைக்கப்பட்டு, உடலும் சிதைக்கப்பட்டது. மேலும், குடும்பத்தினரின் அனுமதியின்றி, அவரது உடலைக் காவல்துறையினர் தகனம் செய்து விட்டனர். தகனம் செய்யப்பட்டது, எங்கள் மகளின் உடல் தானா? என்பதுகூட தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் வீடும் வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆனால், இன்றுவரையில் வேலையும் வீடும் வழங்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள்; ஆனால், சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு என்ற பேரில் வீட்டுக்குள்ளேயே நாங்கள் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறோம்’’ என்று கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.