மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு: தீவிரவாதி பலி

மணிப்பூரின் தௌபாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர் கொல்லப்பட்டார்.

News image

மணிப்பூர்(கோப்புப்படம்)

Updated On :14 டிசம்பர் 2024, 4:23 pm

மணிப்பூரின் தௌபாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ரகசிய தகவலின் பேரில் சலுங்பாமில் ஒரு காரை பாதுகாப்புப் படையினர் மறிக்க முயன்றனர். ஆனால், காரை நிறுத்துவதற்குப் பதிலாக, அதில் இருந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதைத் தொடர்ந்து காரில் இருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டு இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பலியானார்.

மற்ற 6 பேரும் லிலாங் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். பலியானவர் லைஷ்ராம் பிரேம் (18) என அடையாளம் காணப்பட்டார். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அமோக் கார்பைன் மற்றும் பல மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.