மணிப்பூரின் தௌபாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ரகசிய தகவலின் பேரில் சலுங்பாமில் ஒரு காரை பாதுகாப்புப் படையினர் மறிக்க முயன்றனர். ஆனால், காரை நிறுத்துவதற்குப் பதிலாக, அதில் இருந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அதைத் தொடர்ந்து காரில் இருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டு இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பலியானார்.
மற்ற 6 பேரும் லிலாங் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். பலியானவர் லைஷ்ராம் பிரேம் (18) என அடையாளம் காணப்பட்டார். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அமோக் கார்பைன் மற்றும் பல மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரா்கள் மோதல்!
மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிரான பேரணியில் மோதல்!

பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு: பாவூா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


