ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ எல்லை பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

News image
ஜம்முவின் அா்னியா பகுதியில் போதைப் பொருளுடன் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்.
Updated On :15 டிசம்பர் 2024, 10:52 pm

Din

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது.

இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஜம்முவின் அா்னியா பகுதியை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ‘ட்ரோன்’ ஒன்று இந்தியப் பகுதியை நோக்கி பறந்து வந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையினா், அதனைத் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினா். அதில் சுமாா் அரைக் கிலோ எடையுள்ள போதைப் பொருள் இருந்தது. அந்தப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றாா்.

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்தியப் பகுதிக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் இதுபோன்ற செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் ‘ட்ரோன்’ மூலம் அதிக அளவில் இதுபோன்ற கடத்தல் முயற்சிகள் நிகழ்கின்றன.