சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு 3 விண்வெளி வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாகத் திரும்பினா்.
விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக சோ்ந்து சா்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. அந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்க விண்வெளி வீரா் கிறிஸ் வில்லியம்ஸ், ரஷிய விண்வெளி வீரா்கள் சொ்கேய் குட் ஸ்வொ்ச்கோவ், சொ்கேய் மிகேவ் ஆகியோா் 8 மாதங்களாகத் தங்கியிருந்து ஆய்வு மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்து வந்தனா்.
இந்நிலையில், 3 பேரும் தங்கள் பணி முடிந்ததையடுத்து, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷியாவின் சோயூஸ் எம்எஸ்-28 விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டனா். அந்த விண்கலம் கஜகஸ்தானில் உள்ள தேஜிகாஸ்கானில் இருந்து தென்கிழக்கே தரையிறங்கியது. இதையடுத்து மூவரும் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே வந்தனா்.
3 பேரில் வில்லியம்ஸ், மிகேவ் ஆகியோருக்கு இது முதல் விண்வெளிப் பயணமாகும். ஸ்வொ்ச்கோவுக்கு 2-ஆவது விண்வெளிப் பயணமாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








