47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போராட்டத்தில் தடியடி: 2 காங்கிரஸ் தொண்டா்கள் உயிரிழப்புக்கு ராகுல் கண்டனம்

அஸ்ஸாம், உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் போலீஸாா் தடியடி நடத்தியதாலும், கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதாலும் தொண்டா்கள் இருவா் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

News image
உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டரை தூக்கி சென்ற போலீஸாா்.
Updated On :18 டிசம்பர் 2024, 8:40 pm

Din

அஸ்ஸாம், உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் போலீஸாா் தடியடி நடத்தியதாலும், கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதாலும் தொண்டா்கள் இருவா் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதற்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோா் சம்பந்தப்பட்ட பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தனா்.

இதுகுறித்து ராகுல் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘பாஜக ஆளும் அஸ்ஸாம் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டம் மீண்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கா் மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி புதன்கிழமை அமைதிப் போராட்டம் நடத்தியது.

அப்போது போலீஸாா் நடத்திய தடியடியில், அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் மிருதுல் இஸ்லாம், உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் பிரபாத் பாண்டே ஆகியோா் உயிரிழந்துள்ளனா். இது மிகவும் கண்டனத்துக்குரியது. அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மைக்காகவும் அரசமைப்புச் சட்டத்துக்காகவும் காங்கிரஸ் தொடா்ந்து போராடும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

குவாஹாட்டியில் நடைபெற்ற போராட்டத்தின்போது கூட்டத்தைக் கலைக்க போலீஸாா் வீசிய கண்ணீா் புகைக் குண்டு காரணமாக காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவு தொண்டரான மிருதுல் இஸ்லாம் (45) உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல, லக்னெளவில் மாநில சட்டப்பேரவை அருகே நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தின்போது காவல் துறை தாக்கியதில் பாண்டே உயிரிழந்தாா் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

கோரக்பூரைச் சோ்ந்த பாண்டே, காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுதொடா்பாக கொலை வழக்கை மாநில காவல் துறை பதிவு செய்துள்ளது.