மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை! வேலைவாய்ப்பு விளம்பரத்தால் சர்ச்சை!

தென்னிந்தியர்கள் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்ற விளம்பரம் பற்றி...

News image
வேலைவாய்ப்பு விளம்பரத்தில் பாகுபாடு- X
Updated On :18 டிசம்பர் 2024, 9:31 am

DIN

நொய்டாவை மையமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தில் தென்னிந்தியர்கள் தகுதியில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தளத்தில் பதிவிடப்படும் விளம்பரத்தில் வெளிப்படையாக குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை காட்டியுள்ளதற்கு பலர் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மெளனி கன்சல்டிங் சர்வீஸ் என்ற நிறுவனம் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை லிங்க்டின் தளத்தில் வெளியிட்டிருந்தது.

அந்த பதிவில், டேட்டா அனலிஸ்ட் பதவிக்கு 4 ஆண்டுகள் அனுபவமுள்ள தொழில்நுட்ப தேவைகளுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ஹிந்தி மொழி நன்றாக பேச, படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என்றும் பதிவில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நொய்டா நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம்

நொய்டா நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம்

இந்த நிறுவனத்தின் விளம்பரம் இணையதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் நிறுவனத்துக்கு ஆதரவாக, இந்த பணிக்கு ஹிந்தி மிகவும் அவசியம் என்பதாலும், தென்னிந்தியர்களால் நுட்பமாக ஹிந்தி பேச முடியாது என்று ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த மற்றொரு பயனர், தென்னியர்களில் நன்றாக ஹிந்தி தெரிந்தவர்களும் உள்ளர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சொந்த நாட்டுக்குள்ளேயே பாகுபாடு காட்டுவது நியாயமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.