குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பூடானையும் ஆக்கிரமிக்கும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்?

பூடான் கிராமங்களை சீன ராணுவம் ஆக்கிரமிப்பது பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :18 டிசம்பர் 2024, 1:48 pm IST

பூடான் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி 22 கிராமங்களில் சீன ராணுவம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது செய்றகைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பூட்டானின் மேற்குப் பகுதியான டோக்லாமில் கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 22 கிராமங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியது மூலம் சீனா தனது எல்லையை வலுப்படுத்தியுள்ளது.

டோக்லாமில் கடந்த 2017ஆம் ஆண்டில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது, இந்திய ராணுவம் தலையிட்டு கட்டுமானப் பணிகளை நிறுத்தியது. சுமார் 73 நாள்கள் மோதலுக்கு பிறகு இரு நாட்டுப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன.

தற்போது பூடானின் டோக்லா எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் துணை ராணுவப் படையான சாஸ்திர சீமா பல் அந்நாட்டுப் படையுடன் இணைந்து பாதுகாத்து வருகின்றது.

ஆனால், டோக்லா பகுதிகளில் உள்ள 22 கிராமங்களை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 8 கிராமங்களை சீனப் படைகள் நிர்வகித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிரதான நிலப்பரப்பை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் சிலிகுரி பகுதி அருகேவுள்ள பூடான் எல்லையில் சீனா தனது ஆக்கிரமிப்பை வலுப்படுத்தியுள்ளது இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் அஜித் தோவல்

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் தொடா்பாக 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவர சீனா-இந்தியா இடையே கடந்த அக்டோபரில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. தொடர்ந்து, படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு சுமூக உறவு நீடித்து வருகின்றது.

தொடர்ச்சியாக இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் சீனாவில் இன்று நடைபெறும் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பங்கேற்கும் நிலையில், பூடான் எல்லைப் பிரச்னை வெடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.