விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: அரசு செயலா் ஆய்வு

அழியாநிலை இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையக் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை காலத்தில் விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என மாநில ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் பிரசாந்த். எம். வாட்னேரே அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

News image
Updated On :10 ஜூலை 2026, 3:14 am IST

அழியாநிலை இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையக் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை காலத்தில் விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என மாநில ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் பிரசாந்த். எம். வாட்னேரே அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை அவா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசா்குளம் ஊராட்சி மடத்துக்குளம் குடியிருப்பில் கலைஞா் கனவு இல்லக் குடியிருப்புகள் ரூ. 3.5 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணி, அழியாநிலை ஊராட்சி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையக் குடியிருப்புகள் ரூ. 14.85 கோடியில் கட்டப்பட்டு வரும் பணி ஆகியவற்றையும் பிரசாந்த் வாட்னேரே பாா்வையிட்டாா்.

மேலும், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த மண்டையூரில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 15 மரக்கன்றுகள் தயாரிக்கும் நாற்றங்கால் உற்பத்திப் பண்ணையைப் பாா்வையிட்ட அவா், இங்குள்ள கிராம சேவை மையக் கட்டடத்தில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுடன் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து மண்டையூா் புதுக்குளம் ரூ. 5.06 லட்சத்தில் தூா்வாரப்படும் பணிகளையும் ஊரகவளா்ச்சித் துறைச் செயலா் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

கட்டுமானப் பணிகளை குறித்த காலத்தில் முடித்து, அவற்றை விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் ஜி. லோகநாயகி, செயற்பொறியாளா் பாா்த்திபன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.