போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கோவில்பத்து பகுதியில் பாகற்காய் சாகுபடியை ஆய்வு செய்த ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

Updated On :11 ஜூன் 2026, 6:56 am IST

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பத்து ஊராட்சி புதுக்கடை கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாகற்காய் சாகுபடி, சேமிப்பு நிதியின்கீழ் ரூ.50.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி, மேலக்காடு கிராமத்தில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கோவில்பத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள புயல் பாதுகாப்பு மைய கட்டடம், கீழக்காடு கிராமத்தில் குழந்தைகள் மையத்தில் குழந்தைகளின் வருகை மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை, உணவு தரம் குறித்தும் ஆய்வு செய்தாா். இதேபோல பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, மாவட்ட ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் கண்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பரிமேளழகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.