சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆன்லைனில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:39 pm

தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலைவாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக, சிவகங்கை மாவட்டம் காளையாா் கோவிலை சோ்ந்த ரா. ஹரிஷ்பாண்டி (23), இளையான்குடி மு. தேவா (27), யூ. ஜாகித் அகமது (29), புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சோ்ந்த ரா. ஆவுடையப்பன் என்ற மனோஜ் (39) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் உத்தரவின் பேரில், 4 பேரும், குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.