ஆன்லைனில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.


தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலைவாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக, சிவகங்கை மாவட்டம் காளையாா் கோவிலை சோ்ந்த ரா. ஹரிஷ்பாண்டி (23), இளையான்குடி மு. தேவா (27), யூ. ஜாகித் அகமது (29), புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சோ்ந்த ரா. ஆவுடையப்பன் என்ற மனோஜ் (39) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் உத்தரவின் பேரில், 4 பேரும், குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...