தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

வாட்ஸ்ஆப்-ஐத் தொடர்ந்து ஜிமெயில் வெளியிட்ட எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப்-ஐத் தொடர்ந்து ஜிமெயில் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை பற்றி..

News image

ஜிமெயில்

Updated On :19 டிசம்பர் 2024, 6:09 am

எங்கும் மோசடி, எதிலும் மோசடி என்ற அளவில் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்ஆப் மூலம் நடக்கும் மோசடி குறித்த எச்சரிக்கை கடந்த வாரம் வெளியான நிலையில் அதுபோன்ற எச்சரிக்கையை ஜிமெயில் வெளியிட்டிருக்கிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், ஜிமெயில் பயனாளர்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்புவிக்க சில வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி அது குறித்து பயனர்களுக்கு விழிப்புணர்வையும் ஜிமெயில் ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கூகுள் வெளியிட்டிருக்கும் பதிவில், ஜிமெயிலின் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு மிகவும் நன்றி. கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக மோசடிகள் 35 சதவீதம் அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதன் மூலம், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு முன்பு இன்பாக்ஸில் வந்து குவியும் மோசடி மெயில்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோனற் அபாயகரமான மின்னஞ்சல்கள் இன்பாக்ஸை அடைவதற்கு முன்பே தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஷ்ஷிங் மோசடி.. பரிசு விழுந்ததாக, உங்கள் ஆர்டரை உறுதி செய்வதற்காக என்று வரும் மின்னஞ்சல்கள்.

பொருள்களை டெலிவரி செய்வது தொடர்பான போலி மின்னஞ்சல்.. டெலிவரி நிறுவனத்தின் பெயரில் விலை மதிப்புள்ள பொருளை டெலிவரி செய்வதற்கான உறுதிப்படுத்துதல் போன்று வரும் மின்னஞ்சல்கள் போன்றவற்றை மக்கள் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம். திறந்தாலும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

தற்போது ஜிமெயிலில் இதுபோன்ற மோசடி மின்னஞ்சல்கள் வடிகட்டும் வசதி உள்ளது. அதுபோன்ற மின்னஞ்சல்கள் வெளிநபரிடமிருந்து அல்லது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மின்னஞ்சல் என்ற அடையாளத்துடன் உங்களுக்குக் காணக்கிடைக்கும்.

இரண்டு வழி பாதுகாப்பை ஜிமெயிலை திறக்க பயன்படுத்துங்கள். இதனால், பாஸ்வேர்டை ஒருவர் தெரிந்துகொண்டாலும் அதனை திறக்க முடியாது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.