எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்: நடிகர் அல்லு அர்ஜுன்

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம் என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

News image

நடிகர் அல்லு அர்ஜுன்(கோப்புப்படம்)

Updated On :21 டிசம்பர் 2024, 10:08 pm IST

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

புஷ்பா 2 முதல் காட்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பெண் பலியான விவகாரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் சனிக்கிழமை தெரிவித்திருந்தார். அல்லு அர்ஜுன் மட்டும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விட்டு சென்றிருந்தால் எந்த பிரச்னையும் இருந்திருக்காது.

ஆனால் அவர் ரோட் ஷோ நடத்தினார். இதனால், அருகிலுள்ள அனைத்து தியேட்டர்களில் இருந்தும் மக்கள் சந்தியா தியேட்டர் நோக்கி வந்தனர். அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார் என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

தற்போது முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. எனது ரசிகர்களுடன் சந்தியா திரையரங்கில் பல வருடங்களாக திரைப்படம் பார்த்து வருகிறேன். சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து நெரிசல் துயரம் குறித்து எனக்கு தகவல் கிடைத்தது.

அந்த சோகம் தெரிந்தால் எப்படி தியேட்டரில் படத்தை பார்த்து ரசிக்க முடியும்?. எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நெரிசல் துயரம் குறித்து வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜுன், பாதிக்கப்பட்ட ஸ்ரீதேஜின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், ஒவ்வொரு மணி நேரமும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருவதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.