மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜன. 8-ல் முதல் கூட்டுக்குழு கூட்டம்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் பற்றி...

News image
நாடாளுமன்ற கட்டடம்- Express
Updated On :24 டிசம்பர் 2024, 7:24 am

DIN

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடைமுறையை அமல்படுத்துவதற்கான இரு மசோதாக்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்தை தொடர்ந்து கூட்டுக் குழு ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

12 மாநிலங்களவை உறுப்பினர்கள், 27 மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய 39 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்முறையாக எம்பியாக பதவியேற்றுள்ள பிரியங்கா காந்தி குழுவின் உறுப்பினராக உள்ளார். திமுக சார்பில் பி. வில்சன் மற்றும் செல்வகணபதி பெயர்கள் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.