குஜராத்: விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
மும்பையின் தாதா்- குஜராத்தின் போா்பந்தா் இடையிலான சௌராஷ்டிரா பயணிகள் விரைவு ரயில், குஜராத்தின் சூரத் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிா்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.










