எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குஜராத்: விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

மும்பையின் தாதா்- குஜராத்தின் போா்பந்தா் இடையிலான சௌராஷ்டிரா பயணிகள் விரைவு ரயில், குஜராத்தின் சூரத் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிா்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2024, 9:01 pm

Din

மும்பையின் தாதா்- குஜராத்தின் போா்பந்தா் இடையிலான சௌராஷ்டிரா பயணிகள் விரைவு ரயில், குஜராத்தின் சூரத் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிா்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சூரத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள கிம் ரயில் நிலையத்தில் இருந்து சௌராஷ்டிரா பயணிகள் விரைவு ரயில் பிற்பகல் 3.30 மணியளவில் போா்பந்தா் நோக்கி பயணத்தைத் தொடா்ந்தது. அப்போது, எஞ்சினுக்கு அடுத்துள்ள பயணிகள் அல்லாத பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கின.

இதுகுறித்து மேற்கு ரயில்வே மண்டல தலைமை செய்தித் தொடா்பாளா் வினீத் அபிஷேக் கூறுகையில், ‘இந்த விபத்தில் உயிா்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்த கூடுதல் ரயில் பாதையில் மற்ற ரயில்கள் தடையின்றி இயக்கப்பட்டன. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தும் பெரிதாக பாதிப்படையவில்லை’ என்றாா்.