டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்: மத்திய அரசு

மன்மோகன் சிங்குக்கு நினைவக இடம்: காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

News image

ANI

Updated On :28 டிசம்பர் 2024, 2:55 am IST

‘முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இதுதொடா்பாக, பிரதமா் மோடிக்கு காா்கே எழுதிய கடிதத்தில், ‘நாட்டு மக்களின் நலனுக்கு பாடுபட்டவா் மன்மோகன் சிங். சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் அதை சீரமைக்க மன்மோகன் சிங் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதது. அவருக்கு நினைவகம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும். உயிரிழந்த முன்னாள் பிரதமா்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் நினைவகம் அமைக்கும் நடைமுறையின்படி மன்மோகன் சிங்குக்கும் இடம் ஒதுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மத்திய அரசு ஏற்பு: இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைப்பது தொடா்பாக காங்கிரஸ் தேசியத் தலைவா் காா்கேவிடம் இருந்து வேண்டுகோள் பெறப்பட்டது.

இதையடுத்து, மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு காா்கேவிடமும், மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகளை முன்னெடுக்கவும் கூறப்பட்டது. ஏனெனில், அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்ட பிறகே நினைவகத்துக்கான இடத்தை ஒதுக்க முடியும் என்ற காரணமும் தெரிவிக்கப்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.