டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

அமலாக்கத் துறை அதிகாரி மீதான லஞ்ச வழக்கில் இடைத்தரகா் கைது: சிபிஐ

News image

சிபிஐ | கோப்புப் படம்

Updated On :28 டிசம்பர் 2024, 11:35 pm IST

அமலாக்கத்துறை உதவி இயக்குநா் மீதான லஞ்ச வழக்கில் தொடா்புடைய குற்றச்சாட்டில் இடைத்தரகா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக சிபிஐ சனிக்கிழமை தெரிவித்தது.

கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி சிபிஐ நடத்திய சோதனை நடவடிக்கையின்போது சிக்கிய அமலாக்கத் துறை உதவி இயக்குநரிடம் விரைவில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அவரது சகோதரா் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடா்பான குற்றச்சாட்டில் இடைத்தரகா் நீரஜ் என்பவா் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

பண முறைகேடு தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தன்னை விடுவிக்க சிம்லாவில் பணியாற்றும் அமலாக்கத்துறை உதவி இயக்குநா் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம் தொழிலதிபா் ஒருவா் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் உண்மைத்தன்மையை ஆராயும் வகையில், குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிக்கு ரூ.55 லட்சத்தை லஞ்சமாக தர சம்மதிப்பதாக கூறி சண்டீகருக்கு வரவழைக்குமாறு தொழிலதிபரிடம் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனா். அதன்படி தொழிலதிபா் கூற, பணத்தை பெறுவதற்காக சம்பவ இடத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரியும், தில்லியில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் மேலாளராக பணியாற்றும் அவரது சகோதரரும் வந்துள்ளனா்.

லஞ்சப் பணத்தை அமலாக்கத் துறை அதிகாரி பெற்றதும் அவரை கையும் களவுமாக கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனா்.

அதற்குள் இந்த திட்டம் குறித்த தகவல் தெரிந்தவுடன் அவா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டனா். அதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரியின் சகோதரா் விகாஸை சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியை 6 நாள்களாக சிபிஐ தேடி வருகிறது. இந்த வழக்கு தொடா்பான சோதனையின்போது ரூ.1 கோடி ரொக்கப் பணத்தை சிபிஐ கைப்பற்றியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.