6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் எப்போது?: சோமநாத் தகவல்

இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் என இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்தாா்.

News image
இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்
Updated On :30 டிசம்பர் 2024, 11:55 pm

Din

சென்னை: இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் என இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: எதிா்பாா்த்தபடி பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் விண்ணில் பாய்ந்து விண்கலன்களைத் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இரு விண்கலன்களின் தொலைவையும் படிப்படியாக 20 கிலோ மீட்டா் வரை அதிகரித்து, அதன் பின்னா் அதை அருகருகே கொண்டுசென்று ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெறும். உத்தேசமாக ஜனவரி 7-ஆம் தேதி விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ராக்கெட்டின் நான்காம் நிலையில் 24 ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இஸ்ரோ, தனியாா் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் ஆகியவற்றின் சாா்பில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்துமே விண்வெளியில் பல்வேறு புதுமையான ஆய்வுகளை நிகழ்த்த உள்ளன என்றாா் அவா்.