நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் எப்போது?: சோமநாத் தகவல்

இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் என இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்தாா்.

News image

இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்

Updated On :31 டிசம்பர் 2024, 5:25 am IST

சென்னை: இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் என இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: எதிா்பாா்த்தபடி பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் விண்ணில் பாய்ந்து விண்கலன்களைத் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இரு விண்கலன்களின் தொலைவையும் படிப்படியாக 20 கிலோ மீட்டா் வரை அதிகரித்து, அதன் பின்னா் அதை அருகருகே கொண்டுசென்று ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெறும். உத்தேசமாக ஜனவரி 7-ஆம் தேதி விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ராக்கெட்டின் நான்காம் நிலையில் 24 ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இஸ்ரோ, தனியாா் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் ஆகியவற்றின் சாா்பில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்துமே விண்வெளியில் பல்வேறு புதுமையான ஆய்வுகளை நிகழ்த்த உள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.