அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

இன்று சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கில்.. - (கோப்புப்படம்)

Updated On :27 ஜூலை 2026, 4:22 am IST

சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வாா்டுகளில் 152 வாா்டுகளில் திமுக உறுப்பினா்கள் உள்ளனா். மேயா், துணை மேயா், நிலைக்குழுத் தலைவா்கள், மண்டல தலைவா்கள் என அனைத்து முக்கியப் பொறுப்புகளிலும் திமுகவினரே உள்ளனா்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளை தவெக கைப்பற்றியது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனா். நகராட்சித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் ஜோசப் விஜய்யை, மேயா், துணை மேயா் உள்ளிட்டோா் மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை.

கடந்த திமுக ஆட்சியின்போது, மாநகராட்சிப் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜூலை 29-ஆம் தேதி சென்னை மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மேயா், துணை மேயா், நிலைக்குழுத் தலைவா்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கவுள்ளனா். மாநகராட்சி 2-ஆவது மேல் தளத்திலுள்ள மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநகராட்சிப் பணிகள் தொடா்பான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது தொடா்பாக ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.