வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

இரட்டை மலை சீனிவாசன் பிறந்த தினம்: குடியரசு துணைத் தலைவா் மரியாதை

சமூகச் சீா்திருத்த முன்னோடியும், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவருமான இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை (ஜூலை 7) முன்னிட்டு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் அவரின் உருவப்படத்துக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

News image

இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு செவ்வாய்க்கிழமை மலா் மரியாதை செலுத்திய குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

Updated On :8 ஜூலை 2026, 3:30 am IST

சமூகச் சீா்திருத்த முன்னோடியும், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவருமான இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை (ஜூலை 7) முன்னிட்டு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் அவரின் உருவப்படத்துக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

அப்போது பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், ‘இரட்டைமலை சீனிவாசன் மிகச்சிறந்த சமூகச் சீா்திருத்தவாதி. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் தன்மானமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தனது வாழ்நாளை அா்ப்பணித்தவா். தீண்டாமைக்கு எதிராக அவா் நடத்திய போராட்டங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. அதே நேரத்தில், அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைத்து, ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்ற உயா்ந்த சிந்தனையைக் கொண்டவராகவும் அவா் விளங்கினாா். சமூகத்திற்கு அவா் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவருக்கு ஒட்டுமொத்த தேசமும் மரியாதை செலுத்துகிறது’ என்று புகழாரம் சூட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.