கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களின் வறுமை நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்ச்ர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அவர் தெரிவித்ததாவது:
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்துள்ளப்பட்டுள்ளது. 11.8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசின் மானியம் நேரடியாக செலுத்தப்படுகிறது.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும். அடுத்த 5 ஆண்டிகள் என்பது வளர்ச்சிக்கானது. வீட்டின் மொட்டை மாடியில் சூரிய மின்தகடு(சோலார்) அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
2014-ல் மோடி பிரதமராக பதவியேற்கும் போது பொருளாதாரத்தில் இந்தியா பின் தங்கியிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது.