25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிப்பு: மத்திய நிதியமைச்சர்!
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களின் வறுமை நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்ச்ர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களின் வறுமை நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்ச்ர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அவர் தெரிவித்ததாவது:
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்துள்ளப்பட்டுள்ளது. 11.8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசின் மானியம் நேரடியாக செலுத்தப்படுகிறது.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும். அடுத்த 5 ஆண்டிகள் என்பது வளர்ச்சிக்கானது. வீட்டின் மொட்டை மாடியில் சூரிய மின்தகடு(சோலார்) அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
2014-ல் மோடி பிரதமராக பதவியேற்கும் போது பொருளாதாரத்தில் இந்தியா பின் தங்கியிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...