மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெரும் எனவும் 2024 - 2025க்கான முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்யும் எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் பங்குவகிக்கும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி சிவா, '2024 - 2025க்கான முழு பட்ஜெட்டை இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நாங்கள் தாக்கல் செய்வோம். அது சிறப்பான பட்ஜெட்டாக இருக்கும்' என தெரிவித்தார்.
மேலும், 'நாட்டின் குறைகளையும் பிரச்னைகளையும் ஒத்துக்கொள்ள அரசு தயாராக இல்லை. இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, விவசாயம், பெண்களுக்காக எதுவுமே இடம்பெறவில்லை. மேலும் வரவு 50% அதிகரிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால் அரசின் தரவுகள்படி 25% மட்டுமே அதிகரித்துள்ளது' என காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியுள்ளார்.