ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தைக்கு ஜிஎஸ்டி உதவியாக இருக்கிறது. மக்களின் சராசரி வருமான 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
17 ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடரின் பட்ஜெட் கூட்டத்தொடரும், நாடப்பாண்டின் முதல் கூட்டம் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப். 1)காலை 11 மணியளவில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
அப்போது, ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தைக்கு ஜிஎஸ்டி உதவியாக இருக்கிறது. மக்களின் சராசரி வருமான 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பரவலுக்கு பின்னர் உலக ஒழுங்கு மாறியிருக்கிறது.
முத்தலாக் தடை, பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இளைஞர்களுக்கு 22.5 லட்சம் கோடி தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.