கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது: நிா்மலா சீதாராமன்

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது என்றும் நாட்டில் பால் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:36 am

DIN

புது தில்லி: உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது என்றும் நாட்டில் பால் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தார்.

17-ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடரின் பட்ஜெட் கூட்டத்தொடரும், நாடப்பாண்டின் முதல் கூட்டம் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது.

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப். 1)காலை 11 மணியளவில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். 

அப்போது, உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது, ஆனால் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்று நிதியமைச்சர் கூறினார்.

இந்தியாவின் பால் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்து 230 ஆக உள்ளது. 

2022-23 இல் 58 மில்லியன் டன்களாக இருந்தது. பால், பால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்காக ஆத்மா நிர்பர்தாவுக்கான உத்தி உருவாக்கப்படும்.

விவசாயத் துறையில் மதிப்புக் கூட்டல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.