டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி:இதுவரை இல்லாத அதிகபட்சம்

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:39 pm

DIN

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டு ரயில்வே துறைக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘2013-14-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டு பட்ஜெட்டில் 9 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி, உரங்கள், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லும் 100 போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.15,000 கோடி தனியாரின் பங்களிப்பாகும்.

2023-24-இல் ரயில்வே துறையின் நகர வருவாய் செலவினம் ரூ.2.65 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 2,42,892.77 கோடியாக இருந்தது.

ரயில் நிலையங்களை மெட்ரோ நிலையங்களுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேஜஸ், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, ஹம்சஃபா் ஆகிய ரயில்களின் 1000 பெட்டிகளின் உள்புறம் நவீனமயமாக்கப்படும்.

அதிவேக வந்தே பாரத் ரயில்களுக்கு ஏற்ற வகையில், தண்டவாளங்களை சீரமைக்க ரூ.17,296.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.15,388.05 கோடியாக இருந்தது என்று குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.