டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பிஎம் கிஸான்: 11.8 கோடிவிவசாயிகளுக்கு நிதியுதவி

பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை (பிஎம் கிஸான்) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 11.8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:37 pm

DIN

பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை (பிஎம் கிஸான்) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 11.8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மக்களவையில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் அவா் இதைத் தெரிவித்தாா்.

உலகின் மாபெரும் நேரடி பலன் பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றான ‘பிஎம் கிஸான்’ திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு தலா ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது.

நேரடி பலன் பரிமாற்றத்தின்கீழ், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இத்தொகை செலுத்தப்படுகிறது. கடந்த 2019 இடைக்கால பட்ஜெட்டின்போது இத்திட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.