அத்வானியின் தேச சேவை அழியாத முத்திரையை பதித்துள்ளது: ஹிமந்தா பிஸ்வா சர்மா

முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான முடிவை வரவேற்ற அசாம் முதல்வர் ஹிமந்தா, தேசத்திற்கு அவர் செய்த சேவை ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.
ஹிமந்தா பிஸ்வா சர்மா
ஹிமந்தா பிஸ்வா சர்மா
Published on
Updated on
1 min read

குவாஹாட்டி: முன்னாள் துணை பிரதமர் லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான முடிவை வரவேற்ற அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தேசத்திற்கு அவர் செய்த சேவை ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

எளிமையான பின்னணியில் இருந்து அத்வானியின் எழுச்சி, அரசியலில் உறுதிப்பாடு, தைரியம், வலுவான கொள்கைகள் மற்றும் மதிப்புகளை கடைப்பிடிப்பதற்கான பிரகாசமான எடுத்துக்காட்டு என்றார்.

அத்வானி துணைப் பிரதமராக இருந்த காலம், இந்தியா முழுவதுமாக வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை அனுபவித்த காலகட்டமாக போற்றப்படுகிறது.

அவர் ஒரு உண்மையான ராஜதந்திரி, தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவை அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. அதே வேளையில் ஒரு மூத்த தலைவராக, அவரது வழிகாட்டுதல் விலைமதிப்பற்றது. அவரது சாதனைகள் நம் அனைவருக்கும் பெருமை அளிக்கின்றன. இந்த வரலாற்று சிறப்புமிக்க அங்கீகாரத்திற்காக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com