மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஸ்ஸாமில் ரூ.11,600 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அஸ்ஸாமில் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு  பிரதமர் மோடி  அடிக்கல் நாட்டினார்.

News image
அஸ்ஸாமில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
Updated On :4 பிப்ரவரி 2024, 8:15 am

DIN

கௌஹாத்தி : அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தலைநகர் கௌஹாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.  

அப்போது, தெற்காசிய துணை மண்டல பொருளாதார ஒத்துழைப்பு வழித்தட இணைப்பின் ஒரு பகுதியாக 38 பாலங்கள் உட்பட 43 சாலைகள் மேம்படுத்தப்படும் ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

புனித தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் ’மா காமாக்ய திவ்யா பரியோஜனா’ திட்டத்திற்கும்,  வடகிழக்குப் பிராந்தியத்தின்  விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  

மேலும், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.3,250 கோடி செலவில் கட்டப்படவுள்ள கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த புதிய கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று(பிப்.4) அடிக்கல் நாட்டினார்.

அஸ்ஸாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய அமைச்சர் சர்பானந்தா ஸ்னோபால் மற்றும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.