மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூருக்கு நேரில் செல்ல பிரதமர் மோடிக்கு இன்று வரை நேரமில்லை -காங். தலைவர் கார்கே விமர்சனம்

மணிப்பூர் மக்களை இன்று வரை நேரில் சென்று பார்வையிட பிரதமர் மோடிக்கு நேரமில்லை என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்துள்ளார்.

News image
மல்லிகார்ஜுன் கார்கே
Updated On :5 பிப்ரவரி 2024, 10:20 am

DIN

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நிகழ்ந்த தொடர் வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூர் மக்களை பிரதமர் மோடி  இன்று வரை நேரில் சென்று பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் கார்கே தெரிவித்திருப்பதாவது,  

மணிப்பூரில் 9 மாதங்களை கடந்து தொடர்ந்த வன்முறை ஏராளமான உயிர்களை சிதைத்துள்ளது. இநிலையில், மணிப்பூரில் நேரில் சென்று பார்வையிட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரமில்லை. அவர் கடைசியாக மணிப்பூருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மணிப்பூருக்கு சென்றார். அதன்பின் இன்னும் அங்கு செல்லவில்லை.

கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி தொடங்கி இதுவரை மணிப்பூரில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 50,000 பேர் இன்னும் நிவாரண முகாம்களில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் உணவின்றி வாடுகின்றனர். பெண்களும் குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர்.  சூரசந்த்பூர் பகுதியில் மட்டும் நிவாரண முகாம்களில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றனதே தவிர, மாநில அரசிடமிருந்து எவ்வித உதவிகளும்
வழங்கப்படவில்லை.

மக்கள் ஏற்கனவே தங்கள் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 2023 ஆகஸ்டில் மணிப்பூர் மக்களுக்கு  நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது, மணிப்பூரில் அமைதியும் இயல்புநிலையும் திரும்பவில்லை என்று கார்கே தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.