ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஞானவாபி மசூதிக்குப் பதில் கோயில்: ஸ்டிக்கர் ஒட்டியவர் மீது வழக்குப்பதிவு

மத நம்பிக்கைகளை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டதாக ஹிந்து சமாஜ் கட்சி செயலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
ரோஷன் பாண்டே
Updated On :5 பிப்ரவரி 2024, 12:03 pm

DIN

வாரணாசி: ஞானவாபி மசூதிக்கு வழிகாட்டும் அறிவிப்பு பலகையில் மசூதி என்கிற இடத்தை மறைத்து கோயில் என்கிற ஸ்டிக்கர் ஒட்டியவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட பிரிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஹிந்து சமாஜ் கட்சியின் மாநில செயலர் ரோஷன் பாண்டே.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரக்யா பதாக், ஞானவாபி மசூதிக்கு வழிகாட்டும் அறிவிப்பு பலகையில் மசூதிக்கு பதிலாக கோயில் என்று அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டிய நபரின் விடியோ சில தினங்களுக்கு முன்பு வைரலானது.

அதிலுள்ள நபர் ரோஷன் பாண்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் பிரக்யா தெரிவித்தார்.

மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுதல், பொய்யான தகவலைப் பரப்புதல், மத நம்பிக்கையை உள்நோக்கோடு அவமதிக்க முயற்சித்தல் ஆகிய பிரிவின் கீழ் ரோஷன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.