
வாரணாசி: ஞானவாபி மசூதிக்கு வழிகாட்டும் அறிவிப்பு பலகையில் மசூதி என்கிற இடத்தை மறைத்து கோயில் என்கிற ஸ்டிக்கர் ஒட்டியவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட பிரிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஹிந்து சமாஜ் கட்சியின் மாநில செயலர் ரோஷன் பாண்டே.
இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரக்யா பதாக், ஞானவாபி மசூதிக்கு வழிகாட்டும் அறிவிப்பு பலகையில் மசூதிக்கு பதிலாக கோயில் என்று அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டிய நபரின் விடியோ சில தினங்களுக்கு முன்பு வைரலானது.
அதிலுள்ள நபர் ரோஷன் பாண்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் பிரக்யா தெரிவித்தார்.
இதையும் படிக்க: இளைஞர்கள், சுய வேலைவாய்ப்பு உருவாக்க ரூ.1000 கோடி!
மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுதல், பொய்யான தகவலைப் பரப்புதல், மத நம்பிக்கையை உள்நோக்கோடு அவமதிக்க முயற்சித்தல் ஆகிய பிரிவின் கீழ் ரோஷன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.