புதுதில்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் மக்களவையில் உரையாற்றவுள்ளார்.
தற்போதைய அரசின் கடைசி கூட்டத்தொடர் பிப்.9-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதமரின் உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.