புதுதில்லி: மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் தில்லியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
கா்நாடகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு கா்நாடகத்துக்கு மத்திய அரசு இழைத்துள்ள அநீதியைக் கண்டித்தும் தில்லி ஜந்தர்மந்தரில் கர்நாடக அரசு இன்று போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், அரசியல் கட்சிகளை கடந்து கர்நாடக நலனுக்கான போராட்டத்தில் பங்கேற்க கர்நாடகத்தை சேர்ந்த பாஜகவின் எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார். கர்நாடக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் போராட்டத்துக்கு அழைத்திருந்தனர்.
இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு, மத்திய நிதியை தவறாக பயன்படுத்தும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர்.