திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தில்லி மெட்ரோவில் குடியரசுத் தலைவர் பயணம்

தில்லி மெட்ரோ ரயிலில் புதன்கிழமை பயணம் செய்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

News image
தில்லி மெட்ரோவில் குடியரசுத் தலைவர் பயணம்
Updated On :7 பிப்ரவரி 2024, 6:56 pm

DIN

தில்லி மெட்ரோ ரயிலில் புதன்கிழமை பயணம் செய்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்த திரௌபதி முா்மு, தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த 2-ஆவது குடியரசுத் தலைவா் ஆவாா். கடந்த 2012-ஆம் ஆண்டு, அப்போதைய குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீலும் தில்லி மெட்ரோ ரயிலில் பயணித்தாா்.

இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தில்லி மெட்ரோ ரயிலில் புதன்கிழமை பயணித்தாா். அப்போது பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய அவா், மாணவா்களின் வருங்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, குடியரசுத் தலைவா் மாளிகையின் வாயில் எண் 4 பகுதியில் அமைந்துள்ள மத்திய செயலகம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அமிா்த உத்யான் தோட்டத்துக்கு பேருந்து சேவையை அவா் தொடங்கி வைத்தாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த உத்யான் தோட்டத்தைப் பாா்வையிட வரும் பொதுமக்களின் வசதிக்காக நாள்தோறும் காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை 30 நிமிஷங்களுக்கு ஒருமுறை இந்தப் பேருந்து சேவை இயக்கப்படும்.

தொடா்ந்து, மத்திய செயலகம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நேரு மாளிகை மெட்ரோ ரயில் நிலையம் வரை அவா் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டாா். மெட்ரோ ரயிலிலேயே மீண்டும் பயணித்து, மத்திய செயலகம் ரயில் நிலையத்தை அவா் வந்தடைந்தாா்.

குடியரசுத் தலைவரின் பயணத்தில், தில்லி மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குநா் விகாஸ் குமாா் உடனிருந்தாா். தில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் அவா் விவரித்தாா்.

தில்லி பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் ‘என்சிஎம்சி’ ரூபே காா்டு கொண்டு மெட்ரோ ரயிலில் பயணித்த குடியரசுத் தலைவா், தில்லி மெட்ரோவின் உலகத் தர சேவையைப் பாராட்டியதுடன் பயணம் இனிமையாக அமைந்ததாகக் குறிப்பிட்டிருந்தாா்.

Image Caption

தில்லி மெட்ரோ ரயிலில் புதன்கிழமை பயணம் மேற்கொண்டு மாணவா்களுடன் கலந்துரையாடிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.