சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வழக்கு தாக்கலின்போது மனுதாரரின்மதம், ஜாதியை குறிப்பிட வேண்டாம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

வழக்கு தாக்கலின்போது மனுதாரரின் மதம் அல்லது ஜாதியை குறிப்பிடும் நடைமுறையைக் கைவிடுமாறு அண்மையில் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றுமாறு அனைத்து நீதிமன்ற பதிவாளா் அலுவலா்களை உச்சநீதிமன்றம்

News image
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated On :9 பிப்ரவரி 2024, 1:43 pm

DIN

வழக்கு தாக்கலின்போது மனுதாரரின் மதம் அல்லது ஜாதியை குறிப்பிடும் நடைமுறையைக் கைவிடுமாறு அண்மையில் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றுமாறு அனைத்து நீதிமன்ற பதிவாளா் அலுவலா்களை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

நீதிபதி ஹிமா கோலி தலைமையிலான உச்சநீதிமன்ற அமா்வு இது தொடா்பான உத்தரவை கடந்த ஜனவரி 10-ஆம் தேதி பிறப்பித்தது. ராஜஸ்தான் மாநில குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த திருமண விவாகரத்து வழக்கு விசாரணை இடமாற்றத்துக்கான மனுவைப் பரிசீலித்தபோது இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அந்த மனுவில் மனுதாரா்களான கணவன் மற்றும் மனைவி இருவரின் ஜாதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆச்சரியம் தெரிவித்தபோது, ‘மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடமாற்ற மனுவில் மனுதாரா்களின் ஜாதியைக் குறிப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை. குறிப்பாணையில் இந்த விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும் நிலையில், அதைக் குறிப்பிடாவிட்டால் நீதிமன்றப் பதிவாளா் அலுவலகம் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படும்’ என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களிலோ அல்லது மாவட்ட நீதிமன்றங்களிலோ வழக்கு தாக்கலின்போது மனுதாரா் தங்களின் மதம் அல்லது ஜாதியைக் குறிப்பிடவேண்டிய அவசியம் எதுவும் தென்படவில்லை. இது தவிா்க்கப்படவேண்டும். எனவே, அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கலில் மனுதாரா்கள் தங்களின் மதம் அல்லது ஜாதி விவரங்களை குறிப்பிட வேண்டியதில்லை என உத்தரவிடப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடா்பாக அனைத்து நீதிமன்றப் பதிவாளா் அலுவலகங்களுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ‘வழக்கு தாக்கலின்போது மனுதாரரின் மதம் அல்லது ஜாதியைக் குறிப்பிடும் நடைமுறையைக் கைவிடுமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.