திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வடமேற்கு பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 4 காவலர்கள் பலி!

பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின்மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். 

News image
வடமேற்கு பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 4 காவலர்கள் பலி
Updated On :8 பிப்ரவரி 2024, 10:29 am

DIN

ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின்மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். 

காவல்துறையின் கூற்றுப்படி, வாகனம் தேரா இஸ்மாயில் கானில் உள்ள கலாச்சி காவல் நிலையத்தின் எல்லையில் நிறுத்தப்பட்டது. கிரஹா அஸ்லாம் வாக்குச் சாவடியின் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். 

பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இரட்டை பயங்கரவாத தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும், தனிநபரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் அப்பகுதி தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் முன்னாள் கோட்டையாகும்.

அண்மை ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து இந்தக் குழு பல தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.