மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையொட்டி அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மிரட்டலை அடுத்து மும்பையிலிருந்து சென்னை வரும் விமானங்களைக் கண்காணிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையிலிருந்து சென்னை வந்த விமானத்தை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருகின்றனர்.
மும்பை விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர், இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.