விவசாயிகள் பேரணி: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவதற்காக ‘தில்லி சலோ மாா்ச்’ அறிவித்துள்ளன
விவசாயிகள் பேரணி: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Updated on
1 min read

தில்லியில் விவசாயிகள் நடத்தும் சலோ பேரணியால் தில்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், தில்லியில் விவசாயிகள் நடத்தும் பேரணியால் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய விவசாய சங்கள சங்கங்களான சம்யுக்த கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்), கிசான் மஸ்தூா் மோா்ச்சா (கேஎம்எம்) மற்றும் பல விவசாய சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவதற்காக ‘தில்லி சலோ மாா்ச்’ அறிவித்துள்ளன.

விவசாயிகள் பேரணி: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி டிராக்டா் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனர்.

2020 விவசாய போராட்டத்தை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பின் பாரதிய கிசான் யூனியன் விவசாயிகளின் தில்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பு போராட்டத்தில் பங்கேற்பதை இந்த முறை தவிா்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com