பஞ்சாப்-ஹரியாணா எல்லைகளை மூடியதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

தில்லி நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளை தடுக்கும் விதமாக ஹரியாணா-பஞ்சாப் மாநில எல்லைகளை மூடியதற்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாலைகள் கான்கிரீட் தடுப்புகள் மூலம் மூடப்பட்டுள்ள காட்சி
சாலைகள் கான்கிரீட் தடுப்புகள் மூலம் மூடப்பட்டுள்ள காட்சி

ஹரியாணா - பஞ்சாப் மாநில எல்லைகளை மூடியதற்கு கீர்த்தி கிஷான் விவசாய சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், லக்கீம்பூா் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி, உலக வா்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல், 2020 வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு எனப் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

விவசாய அமைப்புகளின் தலைவா்கள் பிடிவாதமாக இருந்ததால் திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் தொடங்கிய பேச்சுவாா்த்தை நள்ளிரவு வரை நீடித்தது.இந்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி தில்லி நோக்கி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பேரணி மேற்கொள்ளப்படும் என்று கிசான் மஸ்தூா் சங்கா்ஷ் கமிட்டி பொதுச் செயலா் சா்வன் சிங் பந்தோ் பின்னா் தெரிவித்தாா்.

தேசியத் தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி டிராக்டா் பேரணியை திங்கள்கிழமை தொடங்கினா்.

பஞ்சாப் விவசாயிகள் ஹரியாணா நுழைவதைத் தடுக்க, இரு மாநில எல்லையில் உள்ள அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருக்ஷேத்ரம், சிா்சா ஆகிய பகுதிகளின் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணி வேலிகளை ஹரியாணா மாநில காவல்துறையினா் ஏற்படுத்தியுள்ளனா்.

டிராக்டா்களில் பேரணியாகச் செல்வதைத் தடுக்கும் விதமாக ஹரியாணாவின் 15 மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.மத்திய துணை ராணுவப் படையின் 50 கம்பெனி படைகளுடன் மாநில காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஏழு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அம்பாலா அருகே ஷம்பு எல்லையில் ஹரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராடும் விவசாயிகளை கலைத்தனர்.

இந்நிலையில், தில்லி நோக்கி பேரணியாகச் செல்லும் விவசாயிகளை தடுக்கும் விதமாக ஹரியாணா - பஞ்சாப் மாநில எல்லைகளை மூடியதற்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மக்கள், தாங்கள் எதிரி தேசத்து மக்களாக கருதப்படுவதைப் போன்று உணர்வதாக, ஹரியாணா மற்றும் மத்திய அரசு மீதும் விவசாயிகள் அமைப்பான கீர்த்தி கிஷான் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கான்கிரீட் தடுப்புச் சுவர்கள், இரும்பு ஆணி வேலிகள் மாநில எல்லைகளில் தடுப்பு அரணாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.பாஜக அரசு மகக்ளை பயமுறுத்த பயங்கரமான சூழலை உருவாக்கி வருகிறது, போராட்டக்காரர்களை நாட்டின் எதிரிகளை போல நடத்துகிறது என்று அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com