கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பஞ்சாப்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000!

பஞ்சாபில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது.

News image

சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

பஞ்சாபில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தது.

மாநில நிதியமைச்சா் ஹா்பல்சிங் சீமா தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் பொதுப் பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.1,000, பட்டியலினப் பெண்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.9,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தலைநகா் சண்டீகரில் முதல்வா் பகவந்த் மான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பைசாகி பண்டிகை முதல் உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணிப்பிக்கும் நடைமுறை தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் பயனடைய முடியும் என்றாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலின்போது இந்தத் திட்டத்தை தோ்தல் வாக்குறுதியாக ஆம் ஆத்மி அளித்தது. அக்கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியுள்ள நிலையில், தற்போது இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.