பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பஞ்சாப்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000!

பஞ்சாபில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது.

News image
- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

பஞ்சாபில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தது.

மாநில நிதியமைச்சா் ஹா்பல்சிங் சீமா தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் பொதுப் பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.1,000, பட்டியலினப் பெண்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.9,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தலைநகா் சண்டீகரில் முதல்வா் பகவந்த் மான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பைசாகி பண்டிகை முதல் உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணிப்பிக்கும் நடைமுறை தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் பயனடைய முடியும் என்றாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலின்போது இந்தத் திட்டத்தை தோ்தல் வாக்குறுதியாக ஆம் ஆத்மி அளித்தது. அக்கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியுள்ள நிலையில், தற்போது இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.