ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்: கவுன்ட்டவுன் தொடங்கியது!

ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்டின் கவுன்ட்டவுன் இன்று பகல் தொடங்கியது.
ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்
ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்

இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்டின் கவுன்ட்டவுன் இன்று பகல் 2 மணியளவில் தொடங்கியது.

வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

அந்தவகையில், அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. அது, ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து பிப்.17-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மொத்தம் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.

இந்த நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான 27.5 மணி நேர கவுன்ட்டவுன் இன்று பகல் 2 மணியளவில் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com