தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 பேர் பலி, 25 பேர் காயம்

மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

சுராசந்த்பூரில் போராட்டக்காரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்து மற்றும் பிற கட்டடங்களுக்கு தீ வைத்தனர்.

Updated On :16 பிப்ரவரி 2024, 4:42 am

DIN

இம்பால்: மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குழுவினருடன் குக்கி-நாகா சமூகத்தை சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து தலைமைக் காவலர் சியாம் லால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைைக் கண்டித்து குக்கி-நாகா சமூகத்தை சேர்ந்தவர்கள் சுராசந்த்பூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

இதனிடையே ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்து மற்றும் பிற கட்டடங்களுக்கு தீ வைத்தனர். இதனால் பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டு வீசினர், போராட்டக்காரர்களும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் தாக்குதல் மேலும் வலுவடைந்த நிலையில் பாதுகாப்புப் படையின் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் புதிய போராட்டங்கள் வெடித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது

சுராசந்த்பூரில் வன்முறையை கருத்தில் கொண்டு இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரியிருந்தனர். இதற்கு குக்கி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் 2023 இல் இரு சமூகத்தினருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இதில் குக்கி-நாகா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டமான சுராசந்த்பூர் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.