கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கைதான அரசு அதிகாரியின் வீட்டில் ரொக்கம் மற்றும் நகைகள்... இவ்வளவா?

கையூட்டு பெற முயன்ற பெண் பொறியாளர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :20 பிப்ரவரி 2024, 7:15 pm IST

தெலங்கானா மாநிலத்தில் பெண் நிர்வாக பொறியாளர் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.1.51 கோடி மதிப்புள்ள 3.6 கிலோ தங்க நகைகள், ரூ.65.5 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக அந்த அதிகாரி அலுவலகத்தில் கையூட்டு பெற முயன்றபோது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார்.

உரிமம் பெற்ற ஒப்பந்ததாரரிடம் 84 ஆயிரம் லஞ்சமாக கேட்டு அதனை பெற்ற போது அதிகாரிகளிடம் சிக்கினார் பொறியாளர்.

பழங்குடி நலன் கட்டுமான துறையில் நிர்வாக பொறியாளராக பணியாற்றும் அதிகாரியான இவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை விசாரணையின் பகுதியாக சேர்க்கப்பட்டதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.