காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் வீட்டில் சிபிஐ சோதனை!

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் வீட்டில் சிபிஐ சோதனை!
Published on
Updated on
1 min read

தில்லியில் உள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர்.

2019-ல் பதவி வகித்த சத்யபால் மாலிக், அவரது பதவிக் காலத்தில் மின் திட்ட ஒப்பந்தத்துக்காக ஊழல் நடந்தாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் தில்லியில் உள்ள முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் வீட்டில் சிபிஐ சோதனை!
தில்லி முதல்வருக்கு மீண்டும் புதிய சம்மன்!

இதுதொடர்பாக சத்பால் மாலிக்கின் எக்ஸ் பதிவில்,

கடந்த நான்கு நாள்களாக நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இருந்தபோதிலும், எனது வீட்டை சர்வாதிகாரிகளின் விசாரணை அமைப்புகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் வீட்டில் சிபிஐ சோதனை!
மேக்கேதாட்டு அணை விவகாரம்: அதிமுக வெளிநடப்பு!

நான் ஒரு விவசாயி மகன். இந்த சோதனைகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன்.

எனது உதவியாளர், ஓட்டுநரிடம் சோதனை செய்து தேவையில்லாமல் துன்புறுத்துகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com