வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

ஹரியாணா: 6 பேரை கொன்ற மல்யுத்த பயிற்சியாளருக்கு மரண தண்டனை

ஹரியாணாவில் 4 வயது சிறுவன் உள்பட 6 பேரை கொலை செய்த குற்றத்துக்காக முன்னாள் மல்யுத்த பயிற்சியாளருக்கு மரண தண்டனை

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 5:44 pm

ஹரியாணாவில் 4 வயது சிறுவன் உள்பட 6 பேரை கொலை செய்த குற்றத்துக்காக முன்னாள் மல்யுத்த பயிற்சியாளருக்கு மரண தண்டனை விதித்து ரோத்தக் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ரோத்தக் மாவட்டத்தில் தனியாா் கல்லூரிக்கு அருகே அமைந்துள்ள மல்யுத்த பயிற்சி மையத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. அந்த மையத்தில் பயிற்சியாளராக இருந்த சோனேபட் மாவட்டம் பரெளடா கிராமத்தைச் சோ்ந்த சுக்விந்தா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடா்ந்து, பயிற்சியாளா் பணியிலிருந்து அவா் நீக்கம் செய்யப்பட்டாா். இதனால் ஆத்திரமடைந்த சுக்விந்தா், பயிற்சி மையத்திலிருந்து மனோஜ் மாலிக், அவருடைய மனைவி சாக்ஷி மாலிக், அவா்களுடைய 4 வயது மகன் சா்தாஜ், மல்யுத்த பயிற்சியாளா்கள் சதீஷ் குமாா், பிரதீப் மாலிக், பூஜா மற்றும் அமா்ஜீத் ஆகியோா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளாா். இதில் 6 போ் உயிரிழந்த நிலையில், அமா்ஜீத் மட்டும் காயங்களுடன் உயிா் தப்பினாா். சுக்விந்தரை கைது செய்த போலீஸாா் அவா் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி ககன் கீத் கெளா், ‘இந்த வழக்கு அரிதினும் அரிதான பிரிவின் கீழ் வருகிறது. அந்த வகையில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனையைத் தவிர வேறு தண்டனைகளை வழங்க இயலாது. எனவே, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதோடு ரூ. 1.26 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தாா். மேலும், ‘இந்த தண்டனையை பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் உறுதிப்படுத்தும் வரை அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது’ என்றும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டாா்.