டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை: ஏர் இந்தியா

அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவை அறிவிப்பு

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 1:42 pm

DIN

மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் ஏ350 மற்றும் பி777 ரக விமானங்களை விரிவுபடுத்துவதால், அமெரிக்க நகரங்களுக்கு அதிக தூர விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா குழுமத்திற்கு சொந்தமான விமான நிறுவனம், விஸ்தாராவின் முன்மொழியப்பட்ட இணைப்பு உள்பட அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய நகரங்களிலிருந்து சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டல்லாஸுக்கு நேரடி விமானங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

தற்போது வாஷிங்டன், நியூயார்க், நெவார்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ ஆகிய இடங்களுக்கு விமானங்களை இயக்கும் ஒரே இந்திய விமான நிறுவனமாக ஏர் இந்தியா உள்ளது. அதே வேளையில் ஏ350 விமானம் சியாட்டிலுக்கும், பி777 ரக விமானங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டல்லாஸுக்கும் இயக்கப்படலாம் என தெரிவித

அமெரிக்க நகரங்களுக்கான விமானங்களைத் தவிர, ஏர் இந்தியா தில்லி மற்றும் மும்பையிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்கு தனது பி 777 விமானங்களை இயக்க பரிசீலித்து வருகிறது.

தற்போது, தில்லி மற்றும் மும்பையிலிருந்து பி787 மூலம் லண்டனுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த மாதம் பெங்களூருவிலிருந்து லண்டன் கேட்விக் செல்லும் போயிங் ட்ரீம்லைனர் விமானத்துடன் விமான சேவையை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஏர் இந்தியா, ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்களிடம் 470 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கியது.

மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் ஏ350 மற்றும் பி777 ரக விமானங்களை விரிவுபடுத்துவதால், அமெரிக்க நகரங்களுக்கு அதிக தூர விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா குழுமத்திற்கு சொந்தமான விமான நிறுவனம், விஸ்தாராவின் முன்மொழியப்பட்ட இணைப்பு உள்பட அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய நகரங்களிலிருந்து சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டல்லாஸுக்கு நேரடி விமானங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

தற்போது வாஷிங்டன், நியூயார்க், நெவார்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ ஆகிய இடங்களுக்கு விமானங்களை இயக்கும் ஒரே இந்திய விமான நிறுவனமாக ஏர் இந்தியா உள்ளது. அதே வேளையில் ஏ350 விமானம் சியாட்டிலுக்கும், பி777 ரக விமானங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டல்லாஸுக்கும் இயக்கப்படலாம் என தெரிவித

அமெரிக்க நகரங்களுக்கான விமானங்களைத் தவிர, ஏர் இந்தியா தில்லி மற்றும் மும்பையிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்கு தனது பி 777 விமானங்களை இயக்க பரிசீலித்து வருகிறது.

தற்போது, தில்லி மற்றும் மும்பையிலிருந்து பி787 மூலம் லண்டனுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த மாதம் பெங்களூருவிலிருந்து லண்டன் கேட்விக் செல்லும் போயிங் ட்ரீம்லைனர் விமானத்துடன் விமான சேவையை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஏர் இந்தியா, ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்களிடம் 470 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.