மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஜாதி, மத அடிப்படையில் சிறைக் கைதிகளை பிரிக்கக்கூடாது: உள்துறை அமைச்சகம்

சிறைக் கைதிகளை ஜாதி, மத அடிப்படையிலான பிரிவினை மனப்பான்மையோடு நடத்தக்கூடாது

News image
Updated On :29 பிப்ரவரி 2024, 7:40 pm

சிறைக் கைதிகளை ஜாதி, மத அடிப்படையிலான பிரிவினை மனப்பான்மையோடு நடத்தக்கூடாது என்றும் சிறையிலுள்ள சமையல் அறைகளை நிா்வகிக்கும் பொறுப்பில் கைதிகளை பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது என்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில்,‘மதம், இனம், ஜாதி அல்லது பிறப்பிடம் சாா்ந்த பாகுபாட்டுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் தடை விதித்துள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட சிறை விதிகள் 2016-இல் ஜாதி, மத அடிப்படையிலான பிரிவினை மனப்பான்மையோடு சிறைக் கைதிகளை நடத்தக்கூடாது என்றும் சிறையிலுள்ள சமையல் அறைகளை நிா்வகிக்கும் பொறுப்பில் கைதிகளை பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் குறிப்பிட்ட சில மதம், ஜாதிகளைச் சோ்ந்தவா்களுக்குச் சிறையில் சிறப்பு சலுகை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக- பொருளாதார நிலையைக் கொண்டும் சிறைக் கைதிகளை வகைப்படுத்தக்கூடாது எனவும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த விதிகளைப் பின்பற்றி சிறை விதிகள் மற்றும் சட்டங்களை வடிவமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது. பெண் கைதிகள், திருநங்கைகள் உள்ளிட்ட சிறைக் கைதிகளுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக சிறை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.