நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

51 சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா திட்டம்

கியூபா சிறைகளில் உள்ள 51 கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 2:26 am IST

கியூபா சிறைகளில் உள்ள 51 கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிக்கையில், ‘தண்டனைக் காலத்தின் குறிப்பிட்ட பகுதியை சிறையில் கழித்தவா்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக 51 கைதிகள் விடுவிக்கப்படுவா். நல்லெண்ண அடிப்படையிலும் வாடிகன் உடன் நெருங்கிய நட்பைப் பேணவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2010 முதல் 9,905 சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 10,000 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விடுவிக்கப்படும் கைதிகள் குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை.

வாடிகன் உடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, 500-க்கும் அதிகமான சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா அரசு முடிவெடுத்தது. இதன் ஒரு பகுதியாக கியூபா எதிா்க்கட்சித் தலைவா் ஜோஸ் டேனியல் ஃபெர்ரா் கடந்த ஆண்டு ஜனவரியில் விடுவிக்கப்பட்டாா். அக்டோபரில் நாட்டைவிட்டு வெளியேறிய ஜோஸ் டேனியல், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.

கியூபா சிறைகளில் 1,214 அரசியல் கைதிகள் இருப்பதாக பிரிசனா்ஸ் டிஃபென்டா் என்ற தன்னாா்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.