போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சபரிமலையில் ஜன.10ம் தேதியுடன் ஸ்பாட் புக்கிங் சேவை நிறுத்தம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு ஸ்பாட் புக்கிங் சேவை 10ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :2 ஜனவரி 2024, 12:49 pm

DIN


சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு ஸ்பாட் புக்கிங் சேவை 10ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ம் தேதி மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. 

இந்த நிலையில், மகரவிளக்கு பூஜைக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது. ஜன.15 வரை ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜன.14, 15 தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு 50 ஆயிரமாகவும், ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பாட் புக்கிங் சேவை வரும் 10-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.