பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

2023ல் சென்னையில் போடப்பட்ட சாலைகள் விவரம்

கடந்த 2023ஆம் ஆண்டில், சென்னை மாநகர் முழுவதும் சுமார் 4,204 தார் சாலைகளை போட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Published On :


கடந்த 2023ஆம் ஆண்டில், சென்னை மாநகர் முழுவதும் சுமார் 4,204 தார் சாலைகளை போட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கும் பல விஷயங்களில், மோசமான சாலைகளுக்கே முதலிடம். அந்த வகையில், கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் தார்சாலைகள் போட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதில், 120 சாலைகள் பேருந்துகள் இயக்கப்படும் சாலைகளாக இருந்ததாகவும், இதன் ஒட்டுமொத்த தொலைவு 82 கிலோ மீட்டராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4084 சாலைகள் உள்பகுதிகளில் அமைந்திருந்தவை என்றும், அதன் ஒட்டுமொத்த தொலைவு 712 கிலோ மீட்டர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2024ஆம் ஆண்டு, சென்னை மாநகரத்தில் ஒட்டுமொத்தமாக 5,500 சாலைகள் போடப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாலைகள் போடப்பட்டதும், உடனடியாக அங்கு கழிவுநீர் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்டப் பணிகளுக்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்படுவது முதல், மழை நீர் சாலைகளில் நிற்கும்போது ஏற்படும் சேதம் காரணமாக, தார்சாலைகள் போடப்பட்டு சில நாள்களிலேயே பழைய அளவுக்கு குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. இதனால், புதிய சாலைகள், பழைய சாலைகள் என்று மக்களால் தரம்பிரித்துப் பார்க்க முடிவதில்லை என்கிறார்கள் மக்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.