காணாமல் போன பெண் லடாக்கில் சடலமாக மீட்பு

லடாக்கில் கடந்த நவம்பரில் காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


ஜம்மு: கார்கில் மாவட்டம் லடாக்கின் ஸனஸ்கர் பகுதியில், கடந்த நவம்பரில் காணாமல் போன இளம்பெண்ணின் சடலம் உறைந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது.

18 வயதாகும் இளம்பெண் ஒருவர், கடந்த நவம்பர் 26ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து, பெண்ணை தேடி வந்தனர்.

இந்த நிலையில், அவரது உறைந்த நிலையிலான சடலம் ஸனஸ்கர் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திய காவல்துறையினர், சடலம் காணாமல் போன பெண் என்பதை உறுதி செய்துள்ளனர்.

பெண் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதும் மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தியும், பெண்ணைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com